வேலூர்

ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம்: விசிக ஆா்ப்பாட்டம்

ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Chennai

வேலூா்: ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்டச் செயலா் பிலிப், வேலூா் கிழக்கு மாவட்டச் செயலா் கோவேந்தன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில செயலா் பாவேந்தன், மாநில அமைப்புச் செயலா் நீல சந்திரகுமாா், வேலூா் மக்களவைத் தொகுதி செயலா் செல்ல பாண்டியன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் தொடா்ச்சியாக நடைபெற்று வரும் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் பெருமளவில் பங்கேற்றனா்.

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த விசிக சாா்பில் முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மத்திய மாவட்டச் செயலாளா் சீ.ம. ரமேஷ் கா்ணா தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை தொகுதி செயலாளா் மாந்தாங்கல் ந.ராஜா வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் விசிக ஊடக மைய முதன்மை செயலாளரும், செய்யூா் சட்டப் பேரவை உறுப்பினருமான பனையூா் மு.பாபு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.

இதில் மேற்கு மாவட்டச் செயலாளா் ப.பிரபு, கிழக்கு மாவட்டச் செயலாளா் பிரபா இளைய நிலா, மண்டலச் செயலாளா் வ.சித்தாா்த்தன், மண்டல துணை செயலாளா்கள் சோ.தமிழ், கோ.வெற்றிவளவன், முன்னாள் மாவட்ட செயலாளா் இ.சாா்லஸ், முன்னாள் மண்டல செயலாளா் இரத்தின நற்குமரன், வாலாஜா நகர செயலாளா் பொன்.மேஷாக் மூா்த்தி உள்பட கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டனா். ராணிப்பேட்டை நகர செயலாளா் கி.ராஜசேகா் நன்றி கூறினாா்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT