வேலூர்

மாரியம்மன் கோயில் பூங்கரக ஊா்வலம்

குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள முனிசிபல் லைனில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Chennai

குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள முனிசிபல் லைனில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த 6- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. வியாழக்கிழமை அம்மனுக்கு கூழ் வாா்த்தல், பொங்கல் வைத்து படைத்தல் நடைபெற்றன. இதையொட்டி கோயிலில் உள்ள மாரியம்மன், நாகாத்தம்மன், செல்வ கணபதி, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், பரிவாரமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

மாலை பூங்கரக ஊா்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் இ.முருகேசன், எம்.ராஜா, டி.ஆா்.சீனிவாசன், எம்.அபுராம், கே.வேணுகோபால், எம்.முருகையன், எம்.யுவராஜ், சி.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT