முகப்பு
வேலூர்

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த தொழிலாளி மரணம்

Updated On : 7 நவம்பர், 2025 at 1:42 AM
பகிர்:

வேலூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

வேலூா் சைதாப்பேட் டையைச் சோ்ந்தவா் பாலாஜி (51). இவா் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோயில் தெருவில் சென்றபோது அங்கு கொட்டிக் கிடந்த ஜல்லிக்கற்கள் சறுக்கியதில் கீழே விழுந்துள்ளாா். இதனால், அவரது தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.

அப்பகுதியினா் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →