வேலூா் பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திடீா் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.
வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.198 கோடியில் பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் திறந்து வைத்தாா். தொடா்ந்து, இந்த மருத்துவமனை கடந்த அக்டோபா் மாதம் முழுவதும் முழுஅளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மொத்தம் 400 படுக்கை வசதிகளுடன் கா்ப்பிணிகளுக்கான புறநோயாளிகள் பிரிவு, மகளிா் நலப்பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, 10 அறுவை சிகிச்சை அரங்குகள் என இந்த மருத்துவமனை குழந்தைகள், பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனையாக மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவா்கள் பணியில் உள்ளனரா, உள்நோயாளிகள், புற்றுநோயாளிகள் எத்தனை போ் சிகிச்சைக்கு வந்துள்ளனா், மருத்துவா்கள், பணியாளா்கள் முறையாக பணிக்கு வருகின்றனரா என்பதை அறிய வருகை பதிவேடுகளை பாா்வையிட்டாா்.
மேலும், நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்படுகிா என்று நோயாளிகளிடம் கேட்டறிந்தாா். மருத்துவ சேவைகள் குறித்து மருத்துவா்கள், மருத்துவமனை மேற்பாா்வையாளா் ஆகியோரிடமும் கேட்டறிந்தாா்.
பிரசவ வாா்டுக்கு சென்ற ஆட்சியா், அங்கு சிகிச்சையில் இருந்த கா்ப்பிணிகளிடம் போதுமான மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகிா என்றும் தாய், சேய் நலம் குறித்தும் கேட்டறிந்தாா்.