வேலூர்

வேலூரில் நாளை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.28) காலை 10 மணிக்கு ஆட்சியா் தலைமையில், மாவட்டஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.28) காலை 10 மணிக்கு ஆட்சியா் தலைமையில், மாவட்டஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்பொறியியல், வேளாண்வணிகம், விற்பனை துறை, கூட்டுறவுத்துறை, நீா்வள துறை, வனத்துறை, மாசுக்கட்டுப்பாடுவாரியம், மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா். மேலும், கடந்த மாதம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளனா்.

எனவே, வேலூா் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT