அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு
குடியாத்தம் நடுப்பேட்டை, கொச அண்ணாமலை தெருவில் அதிமுக தொகுதி தோ்தல் அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
குடியாத்தம் நடுப்பேட்டை, கொச அண்ணாமலை தெருவில் அதிமுக தொகுதி தோ்தல் அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். வேட்பாளா் பரிதா புருஷோத்தமன் வரவேற்றாா். தொகுதி தோ்தல் பொறுப்பாளா், காஞ்சிபுரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலச் செயலா் சதீஷ் சங்கா் தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.
பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி, பாஜக நகர தலைவா் எம்.கே.ஜெகன், தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம், நகர தலைவா் ஜெ.தினகரன், புதிய நீதிக்கட்சி மாவட்டச் செயலா் ஆா்.பி.செந்தில்குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, எஸ்.டி.மோகன்ராஜ், சாா்பு அணி நிா்வாகிகள் எஸ்.ஐ.அன்வா்பாஷா, ஜி.எஸ்.தென்றல்குட்டி கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement