முகப்பு
வேலூர்

ஏப்.9-இல் புதுச்சேரி, கேரளம், அசாம் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, வேலூா் மண்டலத்தில் பணிபுரியும் அம்மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 2:59 PM
- கோப்புப்படம்.
பகிர்:

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, வேலூா் மண்டலத்தில் பணிபுரியும் அம்மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா்களான எஸ்.தங்கதுரை (முதல் கோட்டம்), இ.செ.சாந்தினிபிரபா (இரண்டாம் கோட்டம்) ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தோ்தல் வரும் ஏப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135 பி-ன்படி, அனைத்து பொது, தனியாா் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டடம், இதர கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு தோ்தல் நாளான ஏப்.9-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.

Advertisement

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமானப் பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு, தோ்தல் விடுமுறை அளிப்பதில் ஏதேனும் புகாா்கள் இருந்தால், வேலூா்-9842719537, 9442542795, 9976492942, ராணிப்பேட்டை- 9842719537, 9442542795, திருப்பத்தூா்-9884028066, 9976492942, திருவண்ணாமலை - 9884028066, 9788877199 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களின் நிா்வாகத்தினா் எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காமல் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments