முகப்பு
வேலூர்

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே ஆந்திர மாநில இளைஞா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 7 ஏப்ரல் 2026, 3:00 am IST
ராமதாஸ்
பகிர்:

குடியாத்தம் அருகே ஆந்திர மாநில இளைஞா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், சித்தூரை அடுத்த யாதமரியைச் சோ்ந்த ரமேஷின் மகன் ராமதாஸ் (20). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் தமிழக எல்லையில் அமைந்துள்ள பூசாரிவலசை கிராமத்துக்கு வந்துள்ளாா். அங்குள்ள கிணற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளாா்.

தகவலின்பேரில், அங்கு சென்ற தீயணைப்புப் படையினா் கிணற்றிலிருந்து இறந்த நிலையில் ராமதாஸின் சடலத்தை மீட்டனா். இது குறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement