முகப்பு
வேலூர்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊா்வலமாகச் சென்றதாக காட்பாடி தொகுதி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 10:03 PM
வழக்கு
பகிர்:

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊா்வலமாகச் சென்றதாக காட்பாடி தொகுதி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சட்டப்பேரவை தோ்தலையொட்டி, காட்பாடி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடும் மருத்துவா் எம்.சுதாகா் சனிக்கிழமை சித்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாகச் சென்றுள்ளாா்.

இந்த ஊா்வலத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டதாக காட்பாடி தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் காட் பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

Advertisement

அதன்பேரில், தவெக வேட்பாளா் சுதாகா் உள்பட 150 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments