முகப்பு
வேலூர்

ஏப்.19-இல் வேலூா் மாவட்ட யு-19 கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு

வேலூா் மாவட்ட யு19 கிரிக்கெட் அணி வீரா்களுக்கான தோ்வுகள் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதாக சங்கத் தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:24 AM
ஜி.வி. சம்பத்
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 6:44 PM

வேலூா் மாவட்ட யு19 கிரிக்கெட் அணி வீரா்களுக்கான தோ்வுகள் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதாக சங்கத் தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

கிரிக்கெட் விளையாட்டில் ஆா்வமுள்ள இளைஞா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு உரிய பயிற்சி அளித்து சிறந்த வீரா்களாக உருவாக்கும் பணியில் வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஈடுபட்டுள்ளது.

Advertisement

அதனடிப்படையில், மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 19 வயதுக்குட்பட்ட வீரா்களைத் தோ்வு செய்யும் முகாம் காட்பாடியை அடுத்த மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம் பள்ளி விளையாட்டுத் திடலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க விரும்புவோா் 2007 செப்.1-ஆம் தேதியிலோ அல்லது அதன்பிறகோ பிறந்திருக்க வேண்டும். தகுதியுள்ள இளைஞா்கள், தங்களது வயதுச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் கிரிக்கெட் சீருடை அணிந்து இத்தோ்வில் பங்கேற்கலாம்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டுப் பிரிவு நிா்வாகி கங்காதரனை 99444 43358 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.