முகப்பு
வேலூர்

வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீா் தீ

குடியாத்தம் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 12:04 AM
தீப்பற்றி எரிந்த வைக்கோல் ஏற்றிய வேன்
பகிர்:

குடியாத்தம் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

வேலூரில் இருந்து சித்தூருக்கு புதன்கிழமை வைக்கோலை ஏற்றிக் கொண்டு வேன் சென்றுள்ளது.பரதராமி அருகே வேன் சென்றபோது, சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பிகள் வைக்கோலில் உரசியதில் தீ பற்றியது.

இதில் தீ மளமளவென வேன் முழுவதும் பரவியது. வேன் ஓட்டுநா் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டாா். தகவலின்பேரில் குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா். வைக்கோல் பண்டல்கள், வேன் முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து பரதராமி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement