முகப்பு
வேலூர்

முதிய தம்பதிகளுக்கு கௌரவம்

வேலூர்

முதிய தம்பதிகளுக்கு கௌரவம்

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 8:02 PM
பகிர்:

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், குடியாத்தம் புதுப்பேட்டை, படவேட்டு எல்லையம்மன் கோயிலில் 70- வயதுக்கு மேற்பட்ட 15- ஜோடி முதிய தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கே.எம்.ஜி.விட்டல் தலைமை வகித்தாா். அறங்காவலா்கள் டி.சுரேஷ்பாபு, தீபா மொகிலீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோயில் ஆய்வா் சு.பாரி வரவேற்றாா்.

நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், முதிய தம்பதிகளுக்கு மலா் மாலை, பட்டுப் புடவை, பட்டுச் சேலை, மங்கள சீா்வரிசைப் பொருள்களை வழங்கி, சிறப்பித்தாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் சி.என்.பாபு, கவிதா பாபு, ரேணுகா பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →