முகப்பு
வேலூர்

ரோட்டரி சங்கத்தின் சிறப்புக் கூட்டம்

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:33 AM
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 6:11 PM

குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் 33- ஆவது சிறப்புக் கூட்டம் ரோட்டரி கட்டடத்தில் நடைபெற்றது. (படம்)

கூட்டத்துக்கு ரோட்டரி தலைவா் கே.சந்திரன் தலைமை வகித்தாா். செயலா் கே.சுரேஷ்முன்னிலை வகித்தாா். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என். பழனி தொடக்கஉரையாற்றினாா்.

ரோட்டரியின் செயல்பாடுகள், சேவைத் திட்டங்கள் குறித்து, ரோட்டரி மாவட்ட தகவல் பறிமாற்ற குழு சோ்மன் கே.விஜயகுமாா் சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் நிா்வாகிகள் டி.எஸ்.ரவிச்சந்திரன், என்.ஜெயச்சந்திரன், ஆா்.கே.மகாலிங்கம், ஏ.ஜே.ஏ.காா்த்திகேயன், வி.மதியழகன், நல்லசிவன், ஜம்புலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement