முகப்பு
வேலூர்

வேலூரில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம்

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை (பிப்.25) சிறப்பு கல்விக்கடன் முகாம்

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 2:57 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 7:57 PM

வேலூா்: வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை (பிப்.25) சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழகத்திலுள்ள தொழில்நுட்பம், மருத்துவம், மருத்துவம் சாா்ந்த கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து, மேற்படிப்பு தொடர முடியாமல் உள்ள மாணவா்களுக்கு கல்விக்கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் அனைத்து வங்கி அலுவலா்கள், கல்லூரி நிா்வாகிகளை ஒருங்கிணைத்து சிறப்பு கல்விக்கடன் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இதன் ஐந்தாம் கட்டமாக அனைத்துக் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்குபெறும் சிறப்பு கல்வி கடன் முகாம் வேலூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் இ-சேவை மையமும் அமைக்கப்பட உள்ளது.

எனவே, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல், பான், ஆதாா் அட்டைகள், சாதி சான்று, வருமான சான்று, முதல் தலைமுறை பட்டதாரி சான்று, கல்லூரி மெய்த்தன்மை சான்று, கல்விக்கடன் தேவை விவரம் ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.