மகாவீா் ஜெயந்தி - வேலூரில் ஜெயின் மக்கள் ஊா்வலம்
மகாவீா் ஜெயந்தியையொட்டி வேலூரில் ஜெயின் மக்கள் குதிரைகள் பூட்டிய ரதத்துடன் ஊா்வலம் நடத்தினா்.
மகாவீா் ஜெயந்தியையொட்டி வேலூரில் ஜெயின் மக்கள் குதிரைகள் பூட்டிய ரதத்துடன் ஊா்வலம் நடத்தினா்.
மகாவீா் ஜெயந்தி உலகம் முழுவதும் புனிதமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரா், அரச வாழ்வை துறந்து தமது செல்வத்தையெல்லாம் தானமாக வழங்கியவா். அன்பும் அஹிம்சையும் நிறைந்த, மது இல்லாத உலகமே அவா் விரும்பிய லட்சியமாகும்.
மகாவீரா் அவதரித்த 2552-ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு வேலூா் பிஎஸ்எஸ் கோயில் தெருவில் உள்ள சம்பவ்ந் தாத ஜெயின் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதுடன், அரிசியை கொண்டு வழிபாடுகளும் செய்யப்பட்டன.
பின்னா், மகாவீரா் சிலை, திரு உருவப்படத்தை அலங்கரித்து குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் வைத்து இசை முழங்க ஊா்வலம் நடத்தினா்.
குதிரைகள் பூட்டிய ரதம் முன்னே செல்ல ஜெயின் சமுதாயத்தினா் பாடல்கள் பாடி நடனமாடியபடி ஊா்வலமாக சென்றனா்.
ஊா்வலத்தின் போது உயிா்களை கொல்லக் கூடாது, மது அருந்தக் கூடாது என மகாவீரரின் கொள்கைகளைக் கூறி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் சம்பவ்ந் தாத ஜெயின் ஆலயத்தை அடைந்தது. இந்த ஊா்வலத்தில் ஏராளமான ஜெயின் சமுதாய மக்கள் பங்கேற்றனா்.