உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபர் 7) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: வெரைட்டிஹால் ரோடு, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், ராமநாதபுரம், சுங்கம், ஸ்டேட் வங்கி ரோடு, ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ரேஸ்கோர்ஸ், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை மற்றும் உக்கடத்தின் பிற பகுதிகள்.