கோயம்புத்தூர்

காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி

DIN

கோவையில் காவல் உதவி ஆய்வாளர் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
 கோவை, குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் 4-ஆவது பட்டாலியன் உள்ளது. இந்தப் பயிற்சி மையத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் உதவி ஆய்வாளர் ஸ்ரீகாந்த் (47).
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேலூருக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு  பணியாற்றி வருகிறார். தீபாவளி விடுமுறைக்காக இரு நாள்களுக்கு முன்னர் கோவை வந்தார்.
இதனிடையே, ஸ்ரீகாந்த் விஷம் அருந்தி வீட்டில் வியாழக்கிழமை காலையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
குடும்பத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT