கோயம்புத்தூர்

பன்றிக் காய்ச்சல்:  விவசாயி சாவு

DIN

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த சத்தியமங்கலம் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் விவசாயி குமரவேல் (50). இவர் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்த போது அவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  கடந்த நவம்பர் 30 ஆம் தேதிஅனுமதிக்கப்பட்டார். அவருக்கு தனி வார்டில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கோவை அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு, வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு கடந்த இரண்டு மாதங்களில் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT