கோயம்புத்தூர்

புயல் பாதிப்பு: ரூ. 5 லட்சம் மதிப்புள்ளநிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு

DIN

பெரியநாயக்கன்பாளையத்தில்  உள்ள கோவை வடக்கு நாடார்கள் சங்கத்தின் கிளை சார்பில் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இரண்டாவது முறையாக ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
கடந்த முறை இந்த சங்க நிர்வாகிகள் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  விநியோகித்தனர்.
தற்போது மீண்டும்  இந்த சங்க உறுப்பினர்களால் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணெய்,  மசாலா பொடிகள், மெழுகுவர்த்தி, நாப்கின்கள், துணிகள், போர்வை, பிஸ்கட், பழங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டன. 
இந்த நிவாரணப் பொருள்களை சங்கத்தின் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் பொருளாளர் ஆர்.விஜயபாஸ்கர் துணைத் தலைவர் சோமத்துரை, வசந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நாகைக்கு நேரில் சென்று வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT