கோயம்புத்தூர்

விஷம் வைத்து நாய்கள் கொலை

DIN

அன்னூர் அருகே பிள்ளையப்பம்பாளையத்தில் மர்ம நபர்கள் விஷம் வைத்ததில் 4 வீட்டு நாய்கள் சனிக்கிழமை உயிரிழந்தன.
அன்னூர் அருகே பிள்ளையப்பம்பாளையம் எஸ்.சி. காலனியில் குடியுருப்புகள் உள்ளன. இங்குள்ளவர்கள் வீட்டுக் காவலுக்கு நாய்கள் வளர்த்து வருகின்றனர். குடியிருப்பு அருகே கோழிப் பண்ணைகள் உள்ளன.
இந்நிலையில், சனிக்கிழமை காலை அந்தப் பகுதியில் 4 வீட்டு நாய்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. அருகில் இறந்த கோழிகளும் காணப்பட்டன.
இறந்த கோழியில் விஷம் வைத்து நாய்களை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் எனக் கூறி அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயராணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT