கோயம்புத்தூர்

ஈச்சனாரியில் மேம்பாலப் பணி: பொள்ளாச்சி சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

DIN

ஈச்சனாரியில் புதியதாக மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதால் பொள்ளாச்சி சாலையில் எல் அண்டு டி புறவழிச்சாலை முதல் ஈச்சனாரி வரையில் சாலையில் செல்லக்கூடிய பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களின் போக்குவரத்தில் வியாழக்கிழமை முதல் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் செல்லும் வாகனங்கள் சுந்தராபுரம் எல்.ஐ.சி., சிட்கோ சந்திப்பு வழியாக நேராகச் சென்று ஈச்சனாரி கோயிலுக்கு முன் மதுக்கரை மார்க்கெட் சாலை, மஹாலட்சுமி கோயில் சாலை சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி மீண்டும் மதுக்கரை மார்க்கெட் சாலையை அடைந்து, அங்கிருந்து இடது புறம் திரும்பி மீண்டும் மதுக்கரை மார்க்கெட் சாலையில் சென்று எல் அண்டு டி புறவழிச்சாலை வழியாக மலுமிச்சம்பட்டி சாலை வழியாகச் செல்லலாம்.
அதே போல், பொள்ளாச்சியில் இருந்து கோவை உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள் மலுமிச்சம்பட்டி சாலை வழியாக அல்லது எல் அண்டு டி புறவழிச்சாலை வழியாக இடது புறம் திரும்பி மீண்டும் எல் அண்டு டி புறவழிச்சாலை வழியாக மதுக்கரை மார்க்கெட் சந்திப்பில் இருந்து பிள்ளையார்புரம் சந்திப்பு, காமராஜபுரம் சந்திப்பு வழியாக சுந்தராபுரம் சந்திப்பைச் சென்றடையலாம்.  மேம்பாலப் பணி நடைபெறும் பொள்ளாச்சி சாலையில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT