கோயம்புத்தூர்

ஹோட்டலில் ஆசிரியர் தற்கொலை

DIN

மேட்டுப்பாளையத்தில் வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற ஆசிரியர் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி விஷம் குடித்து தற்கொலை கொண்டார்.
கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் ராஜேந்திரன் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (47).  இவர், நீலகிரி மாவட்டம், கூக்கல்தொரையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரோஜினி (40). இவர்களது மகன் அஜய் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி இறுதி ஆண்டு படித்து வருகிறார். கோத்தகிரியில் வீடு வாங்கிய வகையில் சந்திரசேகருக்கு கடன் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி பள்ளிக்குச் சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சந்திரசேகர் வந்துள்ளார். அன்றிரவு  அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தார், தங்களது உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தனர். ஆனால்அவர் குறித்து விவரம் தெரியவில்லை.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் அண்ணாஜிராவ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் புதன்கிழமை அறை எடுத்து சந்திரசேகர்  தங்கியுள்ளார். மறுநாள் (வியாழக்கிழமை) நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் மேலாளர் சதீஷ்குமார் மேட்டுப்பாளையம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் போலீஸார் அங்கு சென்று அறைக் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது சந்திரசேகர் கட்டிலில் பிணமாகக் கிடந்தார். அருகில் பச்சை நிற சாணி பவுடர் சிதறிக் கிடந்தது. பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT