கோயம்புத்தூர்

கருப்புக் கொடி கட்டி போராட்டம்

DIN

பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையத்தில் கடந்த 12 நாள்களுக்கு மேலாக ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் வீட்டின் முன்பு கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தினர். 
பொள்ளாச்சியை அடுத்த தென்சங்கம்பாளையம் ஊராட்சியில் சமத்துவபுரம் உள்ளது. இந்தப் பகுதியில் 100க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு கடந்த 12 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. 
இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டபோது அவர் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தங்களுக்கு குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என்று கோரியும், சேதமடைந்த கட்டடங்களை சீரமைத்து தரக் கோரியும், தங்கள் வீடுகளின் முன்பும், சமத்துவபுரம் நுழைவாயிலிலும் கருப்புக் கொடிகளை கட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.  அங்கு வந்த போலீஸார் கருப்புக் கொடிகளை அகற்றினர். இதையடுத்து, குடிநீர் விநியோகம் புதன்கிழமை காலையில் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT