கோயம்புத்தூர்

சுதந்திர தின விழா பேச்சுப் போட்டி

DIN

சுதந்திர தின விழாவையொட்டி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
கல்லூரி தமிழ்த் துறையின் இலக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற இந்தப் பேச்சுப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கி.சித்ரா தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் தலைவர் வெ.நிர்மலா வரவேற்றார். பேச்சாளர் கி.தத்தாத்ரேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உதவிப் பேராசிரியர் ப.செல்வி நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT