கோயம்புத்தூர்

தொழிலாளர் நலத் துறையில் ரூ.3.12 கோடி நலத்திட்ட உதவி

கோவை மாவட்டத்தில் தொழிலாளர் நலத் துறை சார்பில் கடந்த ஆண்டு ரூ.3 கோடியே 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 

DIN

கோவை மாவட்டத்தில் தொழிலாளர் நலத் துறை சார்பில் கடந்த ஆண்டு ரூ.3 கோடியே 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 
 இதுதொடர்பாக கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்டத்தில் தொழிலாளர் நலத் துறை சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு உதவித் தொகை, ஓய்வூதியம் என பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 2018 -19 ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டத்தில் 5 ஆயிரத்து 763 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 900, திருமண உதவித் தொகை திட்டத்தில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம், மரண உதவித் தொகை திட்டத்தில் 70 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 66 ஆயிரம், மாதாந்திர ஓய்வூதியத் திட்டத்தில் 3 ஆயிரத்து 80 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 81 லட்சத்து 60 ஆயிரம், பிற திட்டங்களை சேர்த்து மொத்தம் 9,207 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 12 லட்சத்து 40 ஆயிரத்து 400 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT