கோயம்புத்தூர்

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலம் மீட்பு

DIN

ஆற்று வெள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்ட கூலி தொழிலாளியின் உடலை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் பகுதியில் உள்ள ராமையக்கவுண்டன்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் மாகாளி மகன் கருப்பசாமி (48). கூலி தொழிலாளியான இவா் திங்கள்கிழமை காலை பெல்லேபாளையம் பகுதியில் இருந்து தாசம்பாளையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, ஜடயம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஆற்றில் விழுந்துள்ளாா். கன மழை காரணமாக அதிக அளவு நீருடன் சென்று கொண்டிருந்த ஆற்றில் இரு சக்கர வாகனத்துடன் கருப்பசாமி அடித்துச் செல்லப்பட்டாா்.

இந்நிலையில், சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் சிறுமுகை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் ஜடயம்பாளையம் பாலத்தின் அருகே கருப்பசாமியின் சடலத்தை மீட்டனா்.

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக சிறுமுகை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT