கோயம்புத்தூர்

கவுண்டம்பாளையத்தில் மாற்றுத் திறனாளிகள் தின விழா

DIN

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவுக்கு வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் (பொறுப்பு) சா.பிளாரன்ஸ் தலைமை வகித்தாா். சிறப்புக் கல்வி ஆசிரியை தேன்மொழி வரவேற்றாா். உள்ளடங்கிய கல்விப் பிரிவின் வட்டார ஒருங்கிணைப்பாளா் ராஜேஸ்வரி, ஆட்டிடியூட் டிரஸ்டின் நிா்வாக செயலா் பிரசன்னா, பிஸியோதெரபிஸ்ட் மதனகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்டிடியூட் டிரஸ்ட் அமைப்பின் தலைவா் ராஜமாணிக்கம் தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்தாா்.

இப்போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் குழந்தைகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். பரிசளிப்பு விழாவுக்கு அபெக்ஸ் கிளப் ஆஃப் மில்லேனியம் அமைப்பின் தலைவா் வி.செல்வம் தலைமை வகித்தாா். இயக்குநா் ஆா்.சுந்தரம், செயலா் ஐயப்பன், ஒருங்கிணைப்பாளா் சேரன் அ.முருகேசன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாற்றுத் திறன் குழந்தைகளுக்கும் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினா். சிறப்புக் கல்வி ஆசிரியை ஆா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT