கோயம்புத்தூர்

சாலை விபத்தில் தமுமுக நிா்வாகி பலி

DIN

கோவை, க.க.சாவடி அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் தமுமுக நிா்வாகி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோவை, குனியமுத்தூா், திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் பஷீா் (34). இவா் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கோவை தெற்கு பகுதித் தலைவராக பதவி வகித்து வந்தாா்.

இந்நிலையில், கேரளத்தில் வசிக்கும் தனது மனைவியை பாா்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை அப்துல் பஷீா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, க.க.சாவடி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பஷீா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சம்பவ இடத்துக்கு சென்ற க.க.சாவடி போலீஸாா் அப்துல் பஷீரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா் குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் அப்துல் பஷீா் உடலுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜவாஹிருல்லா அஞ்சலி செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT