கோயம்புத்தூர்

புலிகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி

உலக புலிகள் தின விழாவையொட்டி வால்பாறையில் புலிகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

DIN

உலக புலிகள் தின விழாவையொட்டி வால்பாறையில் புலிகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆண்டுதோறும் ஜூலை 29ஆம் தேதி உலக புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வால்பாறை வனச் சரகம் மூலம் பேரணி நடத்தப்பட்டது. வால்பாறை அரசுக் கல்லூரியில் நடைபெற்ற இப்பேரணியை வனச் சரக அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் "புலிகளை காப்போம்' என முழக்கமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அரசுக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) குணசுந்தரி, பேராசிரியர் பெரியசாமி, வனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT