கோயம்புத்தூர்

இருசக்கர வாகனம் மோதியதில் மெக்கானிக் உயிரிழப்பு

DIN

சூலூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மெக்கானிக் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (54). கார் மெக்கானிக். இவர் சூலூரை அடுத்த கரையாம் பிரிவு அருகே அவினாசி சாலையில் திங்கள்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனம் ராஜேந்திரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் சூலூர் போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT