கோயம்புத்தூர்

பேருந்து மோதி தொழிலாளி சாவு

DIN

கோவை அருகே இடையர்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காளப்பட்டியில் உள்ள திலகர் வீதியில் குடியிருப்பவர் அல்போன்ஸ் (45). இவர் இடையர்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் கவுண்டம்பாளையத்தில் இருந்து இடையர்பாளையம் நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தார். கோவை மாநகராட்சி மேல்நிலை குடிநீர்தொட்டி அருகே உள்ள பாலத்தில் செல்லும்போது பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து இவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அல்போன்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துடியலூர் போலீஸார் சடலத்தை மீட்டு கோவை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT