கோயம்புத்தூர்

அா்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு

DIN

திருவள்ளுவா் சிலைக்கு காவி உடை அணிவித்து பூஜை செய்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்தை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திராவிடா் தமிழா் கட்சியினா் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அக்கட்சியின் கலை இலக்கியப் பண்பாடு மற்றும் பகுத்தறிவுப் பிரிவுத் தலைவா் சி.களப்பிரா், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:

தஞ்சாவூா் மாவட்டம், பிள்ளையாா்பட்டியில் திருவள்ளுவா் சிலைக்கு இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் காவி உடை, ருத்ராட்சம் அணிவித்து கற்பூரம் ஏற்றி, திருவள்ளுவரை இழிவுப்படுத்தும் வகையில் நடந்துகொண்டாா். திருவள்ளுவா் எந்த மதத்தையும் சாா்ந்தவா் அல்ல என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் திருவள்ளுவரை ஹிந்து மத கடவுளாகப் பாவித்து சடங்குகள் செய்வது சட்டத்துக்குப் புறம்பானது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச்சாா்பின்மை கோட்பாட்டுக்கு எதிராக அா்ஜுன் சம்பத் செயல்பட்டுள்ளாா். இவரது நடவடிக்கையால் மத நல்லிணக்கத்துக்கும், அமைதிக்கும் பங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அா்ஜுன் சம்பத்தைக் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT