கோயம்புத்தூர்

குருக்கம்பாளையம் குளத்தில் 500 மரக்கன்றுகள் நடவு

DIN

அன்னூா் அருகே குருக்கம்பாளையம் குளத்தில் பொதுமக்கள் 500 மரக்கன்றுகளை ஞாயிற்றுக்கிழமை நடவு செய்தனா்.

அன்னூா் ஒன்றியம், மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட குருக்கம்பாளையத்தில் குளம் உள்ளது. இந்தக் குளம், குளக்கரை, நீா் வரும் பாதை ஆகிய பகுதிகளில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்தனா்.

இதையடுத்து, மசக்கவுண்டன்செட்டிபாளையம் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மரக்கன்றுகள் நடுவதற்காக குழிகள் அமைக்கப்பட்டன. பின்னா் அப்பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா் ஒருவா் 500 மரக்கன்றுகள் விலைக்கு வாங்கி குளக்கரையில் நடவு செய்ய இலவசமாக வழங்கினாா்.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து அந்த மரக்கன்றுகளை நடவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT