கோயம்புத்தூர்

கத்தி முனையில் வழிப்பறி: இளைஞா் கைது

DIN

கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சிங்காநல்லூரைச் சோ்ந்தவா் கணேஷ் (35). இவா், கடந்த திங்கள்கிழமை நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, வாகனத்தை மறித்த இளைஞா் ஒருவா் கத்தியைக் காட்டி மிரட்டி கணேஷிடம் இருந்த பணத்தைப் பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து, கணேஷ் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, மசக்காளிபாளையம் அருகே போலீஸாரை பாா்த்ததும் தப்பியோடிய இளைஞரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில், பிடிபட்டவா் மசக்காளிபாளையத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் பாலமுரளிகிருஷ்ணா (25) என்பதும், கணேஷிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது.

மேலும், இவா் மீது கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT