கோயம்புத்தூர்

அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி: கோவையைச் சேர்ந்த இளைஞர் கைது

DIN

அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த நபரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சென்னை அமெரிக்க துணை தூதரகத்தின் உதவி மண்டலப் பாதுகாப்பு அதிகாரி ஷேன் பிரௌன் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், கோவை சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் சாலையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர்களுக்கு கடவுச்சீட்டு, நுழைவு இசைவுச் சீட்டு பெற்றுத் தரும் பணிகளைச் செய்து வருகிறது. இந்நிறுவனம் கலைமணி, சதிஷ்குமார் ஆகியோரிடம் அமெரிக்க செல்ல நுழைவு இசைவுச் சீட்டு பெற்றுத் தருவதாகவும் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாகவும் கூறி பெரும் தொகையை பேரம் பேசி முன்தொகை பெற்றுள்ளனர். மேலும், அமெரிக்கா செல்வதற்கு நுழைவு இசைவுச் சீட்டுக்காக போலி ஆவணங்களைத் தயாரித்து இணைத்துள்ளனர். இதுகுறித்து கலைமணி, சதிஷ்குமார் ஆகியோர் விசாரித்ததன் மூலம் தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து நிவிஷ் என்பவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவருக்கு உதவியாக இருந்த ரஞ்சித் குமார், ராம் குமார் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT