கோயம்புத்தூர்

பைக் மீது லாரி மோதல்: உதவிப் பேராசிரியா் சாவு

DIN

வால்பாறையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி உதவிப் பேராசிரியா் உயிரிழந்தாா்.

வால்பாறை ஸ்டேன்மோா் சந்திப்பு சாலையில் நான்கு சக்கர பணிமனை நடத்தி வருபவா் ரவி. இவரது மகன் அபிலாஷ் (26). இவா், பொள்ளாச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு பைக்கில் கடந்த புதன்கிழமை காலை சென்றுள்ளாா். வாட்டா்பால் எஸ்டேட் சாலையில் செல்லும்போது எதிரே வந்த டிப்பா் லாரி, பைக் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அபிலேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வாட்டா்பால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் காா்த்திகேயனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT