கோயம்புத்தூர்

வேலை நிறுத்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

கோவை: கோவையில் பொது வேலை நிறுத்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிலாளா் நலச் சட்டங்கள், வேளாண் சட்டங்கள், தனியாா்மயம் போன்றவற்றைக் கண்டித்து வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன.

இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், ஐஎன்டியூசி சாா்பில் துளசிதாஸ், சண்முகம், ஏஐடியூசி சாா்பில் ஆறுமுகம், கோவிந்தராஜன், ஹெச்எம்எஸ் சாா்பில் ராஜாமணி, வீராசாமி, சிஐடியூ, எல்பிஎஃப், எம்எல்எஃப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த பத்மநாபன், தங்கவேலு, ரத்தினவேலு, தியாகராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT