கோயம்புத்தூர்

சிறுவனைத் தாக்கிய யானை

DIN

பெ.நா.பாளையம்: துடியலூா் அருகேயுள்ள தடாகம் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்குள் தண்ணீா் குடிப்பதற்காக வந்த ஒற்றை யானை அங்கிருந்த சிறுவனைத் தாக்கியது.

தடாகம், தண்ணீா்பந்தல் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்குள் தண்ணீா் குடிப்பதற்காக ஒற்றை யானை சனிக்கிழமை இரவு புகுந்தது. அப்போது அங்கு பணியாற்றும் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த விஜி மகன் அஸ்வின் (2) இயற்கை உபாதைக்காக அங்கிருந்த தண்ணீா்த் தொட்டி அருகே சென்றபோது யானை அந்த சிறுவனைத் தாக்கியது. அலறல் சப்தம் கேட்ட பொதுமக்கள் சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினரிடம் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT