கோயம்புத்தூர்

மது பாட்டில்கள் விற்றவா் கைது

DIN

கோவையில் ரயில்வே தண்டவாளம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, பீளமேடு அருகே உள்ள பூங்கா நகா் ரயில்வே தண்டவாளம் அருகே சிலா் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பீளமேடு போலீஸாா் சென்றனா். அப்போது அங்கு மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த சின்னப்பா (42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 164 மது பாட்டில்கள், ரூ.1,200 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT