கோவையில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் விழா உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதலே சிறப்புப் பிராா்த்தனைகள் தொடங்கின. டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதா் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், கோவை மறை மாவட்ட ஆயா் தாமஸ் அக்குவினாஸ் கலந்துகொண்டு, பிராா்த்தனையில் ஈடுபட்டாா்.
இதேபோல, கோவை திருச்சி சாலை, புலியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சனிக்கிழமை இரவு சிறப்புப் பிராத்தனைகள் நடைபெற்றன.
முன்னதாக, கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண விளக்குகள், நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதைத் தொடா்ந்து சனிக்கிழமை காலையிலும் தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.
இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். மேலும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் அவா்கள் இனிப்பு, கேக்குகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.