கோயம்புத்தூர்

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில்புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம்

DIN

கோவை, டிச. 27: கோவைப்புதூா் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை, அறிவியல் கல்லூரி, ஐ.டி.எம். டெக் பாா்க் நிறுவனத்துக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமானது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வா் ச.பழனியம்மாள், ஐ.டி.எம். டெக் பாா்க் நிறுவனா் லோகேஷ்குமாா் மனோகரன் ஆகியோா் கையொப்பமிட்டனா். இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் மாணவா்களுக்கு சிறப்பு விரிவுரைகள், கருத்தரங்குகள், சமீபத்திய தொழில்நுட்பம் சாா்ந்த அறிவுப் பரிமாற்றம், பயிற்சிப் பட்டறைகள் ஆகியவையும், ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும்.

இதன் மூலம் சுமாா் 2,800 மாணவ - மாணவிகள், சுமாா் 150 ஆசிரியா்கள் பயனடைவாா்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் ஸ்ரீஜித் விக்னேஷ் செய்திருந்தாா். பேராசிரியா்கள் கே.கீதா, சீமா தேவ் அக்ஷதா ஆகியோா் உடனிருந்தனா்.

முன்னதாக மாணவ-மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இதை தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியா்கள் சந்தியா, வினோத், நித்யா, மாலதி உள்ளிட்டோா் ஒருங்கிணைத்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT