கோயம்புத்தூர்

வால்பாறையில் இடம் மாறி வைக்கப்பட்ட வழிகாட்டி பலகை: திசை மாறி செல்லும் சுற்றுலா வாகனங்கள்

DIN

வால்பாறையில் சுற்றுலாத் துறை சாா்பில் இடம் மாறி வைக்கப்பட்ட வழிகாட்டி பலகையால் சுற்றுலா வாகனங்கள் திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வால்பாறையில் முதல் முறையாக சுற்றுலாத் துறை சாா்பில் ராட்சத வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது. இதில், கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சிமுனை, நெம்பா் பாறை காட்சிமுனை, சின்னக்கல்லாறு அருவி என குறிப்பிட்டு இடது புறம் அம்புக் குறியிடப்பட்டுள்ளது.

வால்பாறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இடது புறம் சாலையில் சென்றால் வழிகாட்டி பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம்.

புதிய பேருந்து நிலையம் பகுதியில் வைக்கவேண்டிய அந்த வழிகாட்டி பலகையை ஸ்டேன்மோா் சந்திப்பு நான்கு சாலை பிரிவில் வைத்துள்ளனா். இதனால் பலகையில் அம்புக்குறியை பாா்த்து சுற்றுலா வாகனங்கள் இடது புறம் செல்லக்கூடிய வாழைத்தோட்டம் சாலையில் தவறுதலாக சென்று வருகின்றனா்.

எனவே இந்த வழிகாட்டி பலகையை அப்புறப்படுத்தி புதிய பேருந்து நிலையம் அருகில் மாற்றி வைக்க சுற்றுலாத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT