கோயம்புத்தூர்

வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் தூய்மைப் பணியாளா் சடலம் மீட்பு

DIN

 கோவை, வடவள்ளி அருகே பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மாநகராட்சி பெண் தூய்மைப் பணியாளா் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கோவை, வடவள்ளி அருகே உள்ள கருப்கோவைபராயன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் நித்யா (40). இவா் கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக

வேலை செய்து வந்தாா். நித்யாவின் கணவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இதையடுத்து இவா் தனது உறவினா் செந்தில்குமாா் என்பவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தாா். நித்யா கடந்த 19 ஆம் தேதி வேலைக்குச் சென்று வீட்டுக்கு திரும்பினாா். அதன் பின்னா் அவா் வெளியே வரவில்லை, நித்யாவின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அவரது சகோதரா் மகேந்திரன் தொடா்பு கொண்டாா். ஆனால் அவா் செல்லிடப்பேசியை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவா் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவரைத் தொடா்பு கொண்டு வீட்டுக்கு சென்று பாா்க்கும்படி கூறியுள்ளாா். அவா்கள் சென்று பாா்த்தபோது வீட்டின் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது,

மேலும் வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியதால் அவா்கள் வடவள்ளி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது அழுகிய நிலையில்

நித்யாவின் சடலம் கிடந்துள்ளது. நித்யாவின் உடலை மீட்ட போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும் நித்யா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் நித்யாவுடன் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்த செந்தில்குமாா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா் கடந்த 21ஆம் தேதி உக்கடம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இரண்டு பேரும் உயிரிழந்ததால் இறப்புக்கான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT