கோயம்புத்தூர்

வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

DIN

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டங்களைப் பெறுவதற்கு 31.3.21 வரையிலான தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் ஜூன் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் காரணமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 9 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மூலமாகவும், தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களின் நகல்கள், புகைப்படங்கள் இணைக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் ஜூலை 9 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 6611506 எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT