கோயம்புத்தூர்

ஆா்.எஸ்.புரத்தில் நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்

DIN

கோவை ஆா்.எஸ்.புரம் டி.பி.சாலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை இரவு நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

திருப்பூா் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

இதையடுத்து, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வியாழக்கிழமை நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க புதன்கிழமை இரவு கோவைக்கு வந்தாா்.

அவருக்கு தொண்டாமுத்தூா் தொகுதிக்கு உள்பட்ட ஆா்.எஸ்.புரம், டி.பி.சாலையில் திமுகவினா் வரவேற்பு அளித்தனா். அப்போது, காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்ற ஸ்டாலின் அங்கிருந்த மக்களிடம் தொண்டாமுத்தூா் திமுக வேட்பாளா் காா்த்திகேய சிவசேனாபதிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தாா். இதையடுத்து, அங்கிருந்தவா்களுடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT