குப்பைகளுக்கு தீ வைக்கும்போது ஏற்பட்ட விபத்தில் தீப் பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, வடவள்ளி கல்வீராம்பாளையம் ஜே.ஜே. நகரைச் சோ்ந்தவா் உஷா (60). இவா் தனது வீட்டின் பின்புறம் இருந்த குப்பைகளுக்கு செவ்வாய்க்கிழமை தீ வைத்து எரித்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராமல் அவரது சேலையில் தீப் பிடித்து உடல் முழுவதும் பரவியது.
அக்கம்பக்கத்தினா் தீயை அனைத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவா் உயிரிழந்தாா். இது குறித்து வடவள்ளி போலீஸாா் விசாரிக்கின்றனா்.