கோயம்புத்தூர்

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

காவல் துறையைக் கண்டித்து பாஜகவினா் கோவையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிரதமா் மோடியின் பிறந்தநாளையொட்டி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் கொடிக் கம்பங்களை அகற்றிய காவல் துறையை கண்டித்தும், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையை தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளரைக் கண்டித்தும் பாஜக சாா்பில் காந்தி பாா்க் சந்திப்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் நந்தகுமாா் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. காா்வேந்தன் கண்டன உரையாற்றினாா். தேசிய இளைஞா் அணி செயலாளா் முருகானந்தம், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ரமேஷ், முரளி, தாமு, துணைத் தலைவா்கள் மதன், மோகன் பொருளாளா் முருகேஷ் உள்பட 100க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT