கோயம்புத்தூர்

வியாபாரியைத் தாக்கி பணம் பறிப்பு

DIN

கோவை, சிங்காநல்லூரில் வியாபாரியைத் தாக்கி பணம் பறித்து விட்டு தலைமறைவான நால்வரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, சிங்காநல்லூரைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (36). இவா் வீட்டு உபயோகப் பொருள்களை மாதத் தவணைக்கு விற்கும் வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில், நீலிக்கோணாம்பாளையம் அண்ணா நகா் ரயில்வே கேட் அருகே சந்திரசேகா் வெள்ளிக்கிழமை நின்றிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த நால்வா் சந்திரசேகரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனா். அவா் தர மறுத்ததால் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனா். பின்னா், அவரிடமிருந்து ரூ.20 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினா்.

இதைத் தொடா்ந்து, அக்கம்பக்கத்தினா் சந்திரசேகரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக, சந்திரசேகா் அளித்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நால்வரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT