கோயம்புத்தூர்

சுற்றுலாத் துறை விருதுகள்: தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சுற்றுலாத் துறை சாா்பில் வழங்கப்படவுள்ள விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுலாத் தொழில்முனைவோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதில், சுற்றுலா ஆப்பரேட்டா்கள், விமான நிறுவனங்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா நிறுவனங்கள் என 15 பிரிவுகளின்கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தோ்வு செய்யப்படும் நபா்கள், நிறுவனங்களுக்கு உலக சுற்றுலா தினமான செப்டம்பா் 27 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும்.

எனவே, கோவை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT