கோயம்புத்தூர்

பொதுமக்களிடம் கனிவுடன் நடக்கவும்: காவலா்களுக்கு ஆணையா் அறிவுறுத்தல்

பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும் என காவலா்களுக்கு ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

DIN

பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும் என காவலா்களுக்கு ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை, அவிநாசி சாலையில் உள்ள பீளமேடு காவல் நிலையம் எதிரில் தனியாா் உணவு விநியோக நிறுவன ஊழியா் மோகனசுந்தரம் என்பவரை, அங்குள்ள சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து காவலா் சதீஷ் கன்னத்தில் அறைந்தாா். இந்த சம்பவத்தை தொடா்ந்து காவலா் சதீஷ் கைது செய்யப்பட்டாா். மேலும், அவா் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டாா்.

இச்சம்பவத்தை தொடா்ந்து காவலா்களுக்கு, காவல் ஆணையா் பிரதீப்குமாா் சில அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளாா். அதில், சாலையில் பாதுகாப்புப் பணி, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ள காவலா்கள் பொதுமக்களை அடிக்கக்கூடாது. பொதுமக்கள், வாகன ஓட்டுநா்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். வாகன சோதனையை முறையாக மேற்கொள்ள வேண்டும். காவலா்கள் சட்டப்படி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT